சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-3
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
செய்த முன் வினைக்கு விளைவு வரும்
காலம் நேர்ந்ததால் எதையும் ஆராயாதவனாகி
விரிந்த வேப்பம்பூ மாலையணிந்த பாண்டிய மன்னன்
அடிமைச்சேவகரைக் கூவியழைத்து
“அக் கள்வனைக் கொன்று, அச் சிலம்பைக்
கொணர்க இங்கு”என்றான்.
பின்கொலைக்களத்தில் கொலையுண்டு
வீழ்ந்த கோவலன் மனைவி
புகலிடம் இல்லாதவளாகி , நெடுங் கண்ணில் நீர் சொரிந்தாள் ,
அவள்பத்தினி ஆகவே , பாண்டியன் கேடு பெற ,
முத்தாரம் அணிந்த மார்பின் ஒரு முலைமுகத்தைத் திருகி,
நிலைபேருள்ள கூடல் நகர்மேல் எறி ந்து
நெடுந்தீ ஊட்டிய
பலர் புகழ் பத்தினி ஆகும்
இவள்’ என்றார் சாத்தனார் -
காலம் நேர்ந்ததால் எதையும் ஆராயாதவனாகி
விரிந்த வேப்பம்பூ மாலையணிந்த பாண்டிய மன்னன்
அடிமைச்சேவகரைக் கூவியழைத்து
“அக் கள்வனைக் கொன்று, அச் சிலம்பைக்
கொணர்க இங்கு”என்றான்.
பின்கொலைக்களத்தில் கொலையுண்டு
வீழ்ந்த கோவலன் மனைவி
புகலிடம் இல்லாதவளாகி , நெடுங் கண்ணில் நீர் சொரிந்தாள் ,
அவள்பத்தினி ஆகவே , பாண்டியன் கேடு பெற ,
முத்தாரம் அணிந்த மார்பின் ஒரு முலைமுகத்தைத் திருகி,
நிலைபேருள்ள கூடல் நகர்மேல் எறி ந்து
நெடுந்தீ ஊட்டிய
பலர் புகழ் பத்தினி ஆகும்
இவள்’ என்றார் சாத்தனார் -
வினை விளையும் காலம் என்றீர்களே
எது அவர்கள் வினையின் விளைவு
என்று இளங்கோ கேட்க
"வீரப்பெருந்தகையே! கேளுங்கள்
குன்றாச்சிறப்புள்ள மதுரை மூதூரில்
கொன்றைமாலை அணிந்த சடைமுடியார்
கோயில் முற்றத்தில் வெள்ளியம்பலத்தில்
நள்ளிரவில் நான் படுத்திருந்தேன்;
அப்போது ஆறாத்துயர் கொண்ட
வீர மாபத்தினி கண்ணகி முன்னர்
மதுரையின் மாதேவி தோன்றி
கொதிக்கும் தணல் சீற்றத்தை
பிய்த்து எறிந்த முலையால் தோற்றுவித்தவளே,
உங்கள் நல்வினைப்பயன் முடிந்தது ;
முந்திய பிறவியில் பைந்தொடியாளே
சிதையாச் சிறப்புள்ள சிங்கபுரத்துச் சங்கமன்
என்னும் வாணிகன் மனைவி உனக்கு
இட்ட சாபம் வந்து கூடியது; எனவே
நீண்டு தழைத்த கூந்தல் உடையோளே!
உன் கணவனைப் பதினான்கு நாள் கடந்து
வானோர் வடிவில் அன்றி இங்குள்ளோர்
வடிவில் காண்பதற்கில்லை என்றது
அக்குற்றமில்லாச் சொற்களை நான் கேட்டேன்
என்றார் சாத்தனார்
எது அவர்கள் வினையின் விளைவு
என்று இளங்கோ கேட்க
"வீரப்பெருந்தகையே! கேளுங்கள்
குன்றாச்சிறப்புள்ள மதுரை மூதூரில்
கொன்றைமாலை அணிந்த சடைமுடியார்
கோயில் முற்றத்தில் வெள்ளியம்பலத்தில்
நள்ளிரவில் நான் படுத்திருந்தேன்;
அப்போது ஆறாத்துயர் கொண்ட
வீர மாபத்தினி கண்ணகி முன்னர்
மதுரையின் மாதேவி தோன்றி
கொதிக்கும் தணல் சீற்றத்தை
பிய்த்து எறிந்த முலையால் தோற்றுவித்தவளே,
உங்கள் நல்வினைப்பயன் முடிந்தது ;
முந்திய பிறவியில் பைந்தொடியாளே
சிதையாச் சிறப்புள்ள சிங்கபுரத்துச் சங்கமன்
என்னும் வாணிகன் மனைவி உனக்கு
இட்ட சாபம் வந்து கூடியது; எனவே
நீண்டு தழைத்த கூந்தல் உடையோளே!
உன் கணவனைப் பதினான்கு நாள் கடந்து
வானோர் வடிவில் அன்றி இங்குள்ளோர்
வடிவில் காண்பதற்கில்லை என்றது
அக்குற்றமில்லாச் சொற்களை நான் கேட்டேன்
என்றார் சாத்தனார்
No comments:
Post a Comment